மதுரையில் பா.ஜ.கட்சியின் சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Loading

மதுரையில் பா.ஜ.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று மாவடி சந்திப்பில் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கந்தசாமி தலைமையில் தி.மு.க அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி (வீட்டுவரி) உயர்வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மண்டல் தலைவர் திருப்பதி ஜி, கிழக்கு மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் போதி லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். புறநகர் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் மகளிரணியினரும் ஏராளமானோர் கலந்து கொண்டு திரும்ப பெறு, திரும்ப பெறு, பால் விலை, மின்சார கட்டண உயர்வை தமிழக அரசே திரும்பபெறு என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

0Shares

Leave a Reply