இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சக்கரமல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மை ஸ்கூல் பள்ளியில் இராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை (Government Model School) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.புவனேஸ்வரி சத்தியநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உஷா. உதவி திட்ட அலுவலர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.