பள்ளி கல்வித்துறை சார்பில் டேக்-வாண்டோ போட்டி “

Loading

“தருமபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது”
தருமபுரி,அக்.14:
தருமபுரி மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் டேக் வாண்டோ போட்டி தருமபுரி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 53 பள்ளிகளில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்து விளையாட்டினை ஒருங்கிணைத்து நடத்திய லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சாக்ரடீஸ் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சப்தகிரி கல்லூரியின் தாளாளர்.எம் ஜி. சேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி அலுவலர் முத்துக்குமார் மாவட்ட அலுவலர் சாந்தி ஆகியோரும் கலந்து கொண்டு போட்டிகளை வழிநடத்தினார்கள். சிறப்பாக நடத்திய உடற்கல்வி இயக்குனர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள்,  மாணவிகள், பெற்றோர்கள் பார்வையாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *