வசூலை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம்
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் வெளியான முதல் வாரத்தில் ரூ.100கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூலை குவித்த படமாக முதல் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகமுழுவதும் இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 100கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.