ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், சௌட்டஅள்ளி ஊராட்சியில் உள்ள ராமர்பட்டிணம் கிராமத்தில் சந்தரேசன் என்ற தனிநபர் அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளை அழித்து சுமார் 50 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த நிலத்தில் சுமார் 5600 மாமரங்களை வைத்து அனுபவித்து கொண்டு வருகிறார். இது சம்மந்தமாக சௌட்டஅள்ளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலக அலுவலர், வட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் கிராம பொதுமக்கள்  பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியாவது காலம் தாழ்த்தாமல்  இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் உள்ள பலன் தரும் மரங்களை சௌட்டஅள்ளி ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சி சொத்தாக மாற்றி தருமாறு  ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது ஆம் தனிநபர் ஆக்கிரமிப்பு உன்மைதான் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராம சபையில் தீர்மானம் வைக்கப்பட்டது ஆனால் இந்நாள் வரை தீர்த்து வைக்கப்படவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் இக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொண்டார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *