“கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம்”! மாவட்ட ஆட்சியரிடம் மனு !
“கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம்”!
மாவட்ட ஆட்சியரிடம் மனு !
ஈரோடு செப்டம்பர் 27
கீழ்பவானி திட்ட பாசன பகுதிகளில் நன்செய் பாசனத்திற்கு நீரை முறை வைத்து வழங்கும் முடிவை கைவிடுமாறு கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
அதில் தெரிவித்துள்ளதாவது தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு கொண்டு இருப்பதை 26 ஆம் தேதி முதல் முறை வைத்து நீர் வழங்க செயற்குறியாளர் கீழ்பவானி மடிநில கூட்டம் ஈரோடு 2 பாசன சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதை அறிகிறோம் பவானிசாகர் அணையில் நீர் நிரம்பி உள்ளதால் மேல் பகுதியிலேயே நெல் நடவு வேலைகள் முடிவு பெறாத நிலையிலும் முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவு ஆகும் இதை கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு விவசாயிகள் சார்பில் ஒத்துக்கொள்ள முடியாது உடனடியாக முறை வைத்து நீர் வழங்குவதை அமுல்படுத்தாது எல்லா மதகுகளுக்கும் உரிய நீரை முழுமையாக வழங்கி விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பட உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளனர்.