* சிவகங்கை மாவட்டத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்*

Loading

இந்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வருடந்தோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகின்றது. இம்மாநாடு பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கவும், அவர்களது அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் விதத்திலும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருளாக “ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது” என்ற தலைப்பு தேசிய அளவில் ஆய்வு தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்யும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியானது தேவகோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில் உள்ள உமையாள் அரங்கத்தில் நடைபெற்றது.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொருளாளர் ஜீவானந்தம், சிவகங்கை மாவட்ட கவுரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவரும் உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜெயசாலா வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட தலைவர் முனைவர் கோபிநாத் கரு பொருள் குறித்து நோக்க உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் ரகுநாதன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உதவி பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் நம்முடைய சுற்றுச் சூழலினை தெரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் முனைவர் நாகேந்திரன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப்பது என்ற தலைப்பிலும், இணை பேராசிரியர் கோமளவல்லி சூழல் அமைப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகள் என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் கோபிநாத் தன்னம்பிக்கைக்கான சூழலியல் அடிப்படையிலான அணுகுமுறை என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் ஆறுமுகம் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்ற தலைப்பிலும் கருத்தாளர்களாக செயல்பட்டனர். வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா நன்றி கூறினார், காளையார்கோவில், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், !மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்று சிறப்பு செய்தார்கள்.
0Shares

Leave a Reply