உலக அளவிலான காவலர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற குமரி மாவட்ட பெண் தலைமை காவலர்… பாராட்டுக்களை தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிபவர் பெண் தலைமை காவலர் கிருஷ்ணரேகா 2019 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் தீயணைப்பு வீரர்கள் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார். இந்த வருடம் நடந்த காவல் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் நெதர்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றார்.
அவருடைய திறமையை கண்டு பல்வேறு சமயங்களில் அவரை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு அவர் உலக அளவிலான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி பெறுவதற்கும் உதவிகளை செய்தார்.
உலக அளவிலான போட்டியில் கலந்து கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று நெதர்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில் நெதர்லாந்தில் (25-07-2022) அன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார் .
பெண் தலைமை காவலர் கிருஷ்ணரேகா . அவர் வெற்றி பெற்ற செய்தி அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் தலைமை காவலர் கிருஷ்ணரேகாக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். இந்த வெற்றியானது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.