இலவச கண் பரிசோதனை,கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் முகாம்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் உள்ள டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் கிளினிக் வளாகத்தில் மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை மற்றும் எம்.என்.கண் மருத்துவமனை,பிரதாப்மால் ஜாவான்த் ராஜ் பந்தாரி சாரிடபுள் டிரஸ்ட் ஆதரவுடன் இணைந்து பொதுமருத்துவம்,இலவச கண் பரிசோதனை,கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் முகாமினை நடத்தியது.
மாதாந்திர இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவர்களால் நவீன மருத்துவ கருவிகள் கொண்டு கண்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் கண்டறியபட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கி,நோயாளிகளுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.இரத்த அழுத்தம்,பொதுமருத்துவம் மற்றும் கை,கால்,தோள்பட்டை பிரச்சினைகளுக்கு அட்டாமா அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கபட்டது.
இம்முகாமில் நிருவனர் எஃப்.சி ஜெயின்,செயலாளர் நிரன்ஜன் சோலாங்கி,பொருலாளர் பசன்ட் பர்டியா,இணை செயலாளர் ஹீராலாள் ஜெயின் கோத்தாரி,இயக்குனர் பிரவின் ஜெயின்,மருத்துவர் சரத் ராஜ்,பங்கஜ் ஜெயின்,லலித் ஜெயின்,டிம்பில் அகர்வால்,இந்திரா ஜெயின்,அசோக் ரங்கா, உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.
இம்முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து கண்பரிசோதனை செய்துகொண்டு பயண்பெற்றனர்.கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.