கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி செல்போன் டவர் அமைக்கும் பணி…..மாவட்ட ஆட்சியரை சந்தித்து செல்போன் டவர் அமைக்கும் பணியினை கைவிட கோரி பொதுமக்கள் மனு..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த வாவறை ஊராட்சி பகுதி மக்கள் நேற்று  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். வாவறை ஊராட்சி பகுதியில் 250 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த குடியிருப்பு பகுதிக்கு மையப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் அந்த பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி இந்தப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து பொதுமக்கள் அங்கு சென்று கேட்டபோது மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காண்பித்து செல்போன் டவர் இந்த பகுதியில் தான் அமைப்போம் என தனியார் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செல்போன் கோபுர பணிகளை தடுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து அனைவர்  மீதும் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அனைத்து துறை அதிகாரிகளுக்கும்  மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தி அதில் பல்வேறு தீர்மானங்களை அரசு நிறைவேற்றி கொடுத்து வருவதில் இனிமேல் வாவரை ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது என அப்பகுதி மக்கள் தீர்மானித்துள்ளனர்..எனவே செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி அளித்ததை உடனடியாக மாவட்ட ஆட்சியர் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *