ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொலை மிரட்டல்….!
புதுச்சேரி மாநிலம், திப்பராய்பேட்டை பகுதியில் உள்ள பச்சை வாழை அம்மன் கோவில் தலைவர் வீராசாமி. இவர் மீது அப்பகுதியில் உள்ள சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கோவில் தலைவர் வீராசாமி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த சக்திவேல், உஷா, ரேணுகா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.