மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் மாநில இணைத்தலைவர் மாரியப்பன் அவர்கள் தலைமையில்
மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நகர் தலைவர் முத்துபாண்டி அவர்கள்
முன்னிலையில் ராஜீவ் காந்தி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை காங்கிரஸார் ஏற்று கொண்டனர். தொடர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் சுகுமாறன், குருசாமி, அஜபா பாதா, வெங்கட சுப்பிரமணியன், நிறை குளத்தான், சரவணகுமார்,
சத்தியமூர்த்தி, ராஜ பிரபாகரன், இருளப் பன், கமலா ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.