சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டார்

Loading

சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டதற்கு, அதிமுக_வின் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மணி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தர்ராஜன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *