மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலம்

Loading

சென்னை,

பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் வல்லமை பெற்றவர் இந்து மதக்கடவுள் சிவபெருமான்.

சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக்கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான்.

உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை வழிபாட்டார். அந்த இரவே ‘சிவராத்திரி’ ஆகும்.

பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும்.

உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான்.

பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெரு மானிடம் இருந்து ‘பாசுபதம்’ என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே.

மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் இது.

பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.

கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் இன்னாளே.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரி. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வருவது ‘மகா சிவராத்திரி’ எனப்படும்

இந்நிலையில், உலகம் முழுவதும் இன்றூ மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதிலும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் சிவன் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் சிவபெருமானை வழிபாட்டு வருகின்றனர்.

0Shares

Leave a Reply