புதுச்சேரி சட்டத்துறை கொண்டு வந்துள்ள அரசு வழக்கறிஞர் பணி நியமன விதி – 2021ஐ மாற்றி அமைக்க வேண்டி தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது: பாஜக வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் மா.கார்த்திகேயன்
புதுச்சேரி பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசு வழக்கறிஞர் பணிக்கான புதிய நியமன விதிகளை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற பணி நியமனத்தில் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் திரு. அஸ்வானி குமார்., IAS அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சமீபத்தில் புதுச்சேரி சட்டத்துறை கொண்டு வந்துள்ள அரசு வழக்கறிஞர் பணி நியமன விதியின் படி புதுச்சேரி வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி நியமனம் செய்வதற்கான வாய்ப்பு முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோரோனா ஊரடங்கு அமல், நீதிமன்ற பணிகள் முடக்கம் போன்ற காரணங்களால் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய தாமதம் ஏற்படும். இதனால் ஏராளமான வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்வதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். எங்களுடைய கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட தலைமைச் செயலாளர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் புதுச்சேரி பாஜக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மா.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் பழனி ராஜா முன்னிலை வகித்தார். இவர்களுடன்
பாஜக வழக்கறிஞர்கள் தேவேந்திரன், கணேஷ்ஞானசம்பந்தம், கிருஷ்ணராஜ், ஆதிநாராயணன், சீனிவாசப்பெருமாள், ஜெயபால், ஐயப்பன், கார்த்திக், திலகவதி, சித்ரா, பிரகாஷ், புவனேஸ்வரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.