விருகம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது. 39.2 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.

Loading

விருகம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா
புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது. 39.2
கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive
against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி
வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,
அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான
காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, குட்கா மற்றும் போதை
பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
நேற்று (11.06.2021) சாலிகிராமம், காந்திநகர், திவாகர் தெருவில் கண்காணித்த
போது, அங்கு ஒருவர் குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து
கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் மேற்படி இடத்தில் தடை செய்யப்பட்ட குட்கா
புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஜாகீர் உசேன்,
வ/53, த/பெ.அப்தாலி, எண்.33/25, 7வது தெரு, திருநகர், வடபழனி என்பவரை
கைது செய்தனர். அவரிடமிருந்து 39 கிலோ 200 கிராம் குட்கா புகையிலைப்
பொருட்கள் , பணம் ரூ.6,800/- பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *