சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 30 பேர் காயம்

Loading

பழனி கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு திருப்பூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா சென்று திரும்பும்போது பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள சவரிக்காடு அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30பேரும் காயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0Shares

Leave a Reply