ஆத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான S.மாதேஸ்வரன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான S.மாதேஸ்வரன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஆத்தூர் பேருந்து நிலையம், 4ரோடு, ராணிப்பேட்டை, காமராஜனார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் தனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார். உடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *