நமக்குநாமே திட்டத்தின்கீழ் 2.51கோடியில் புனரமைப்பு

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சி காக்களூர் ஏரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தணிகாச்சலம், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.செல்வகுமார், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares