திருடி சென்ற நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை
![]()
திருவள்ளூர் அருகே கள்ள காதலியின் 18 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கொலையும் செய்துவிட்டு நகைகளை திருடி சென்ற நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை : மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு :
திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கணவனைப் பிரிந்த கள்ளக்காதலியுடன் மனைவியை பிரிந்து வசித்து வந்த கட்டிட மேஸ்திரி நஜ்முதீன் என்ற ராஜு மணி நாயரின் கள்ளக் காதலியின் முதல் கணவருக்கு பிறந்த 18 வயது மகளை வன்கொடுமை செய்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகைகளுடன் மும்பைக்கு தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து கொலை செய்யப்பட்டவரின் தாய் அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையில் கைது செய்த பூந்தமல்லி குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தமிழினியின் ஆஜராகி வாதாடினார்.
விசாரணை முடிந்து இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் 18 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, கொலை செய்தது மற்றும் நகைகளை திருடி சென்றது போன்ற குற்றங்களுக்காக 3 ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

