ஜெகதளா கிராம ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள  ஜெகதளா கிராமத்தில் படுகரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் திருவிழாவில்  ஏராளமான மக்கள்   கலந்து கொண்டனர்.
நீலகிரியில் உள்ள படுகரின மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தை சுற்றியுள்ள காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிகொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி உட்பட எட்டு  ஊர்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடினர்.
ஹெத்தையம்மனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து வந்த பூசாரிகள்  கடந்த ஏழு நாளாக, காரக்கொரை கிராமத்தில் உள்ள “மக்கமனை’ என்ற கோவிலில் தங்கி, விரதம் இருந்து சிறப்பு பூஜை நடத்தி,பின், ஹெத்தையம்மன் குடையை ஏந்தி, ஆடல் பாடலுடன்  எட்டு  ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று, சிறப்பு பூஜை செய்த படக இன  மக்கள் வெள்ளை நிற ஆடை  போர்த்தி, பாரம்பரிய உடையணித்து,  ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, பாரம்பரிய நடனமாடியபடி ஜெகதளா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்த பின்னர்  ஜெகதளா கிராமத்தில் “மடிமனை’ என்ற இடத்தில் உள்ள ஹெத்தையம்மன் சிலையை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து  வந்தனர்; இந்த விழாவில் 1000 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு    ஹெத்தை அம்மனுக்கு காணிக்கையை  செலுத்தி வழிப்பட்டனர். மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் படுகர் இன மக்களின் பாரம்பரிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
0Shares