மலைத்தேனீக்கள் பெண்கள், முதியவர் எனகொட்டியது

Loading

திருவள்ளூர் அருகே மரத்தை வெட்டும் போது அதிலிருந்து மலைத்தேனீக்கள் கிளம்பி பெண்கள், முதியவர் என 15-க்கும் மேற்பட்டோரை கொட்டியதால் மருத்துவமனையில் சிகிச்சை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா நேரில் ஆறுதல் :

திருவள்ளூர் டிச 30 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் ஊராட்சி கம்மவார் பாளையத்தில் உள்ள மரத்தை ஒருவர் வெட்டி கொண்டிருந்தபோது அதிலிருந்து புறப்பட்ட மலைத் தேனிக்களானது அங்கு 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் அவ்வழியாக சென்ற முதியவர் என 15-க்கும் மேற்பட்டோரை  கை, கால், முதுகு என பெரும்பாலான இடங்களில் கடித்துள்ளது. இதனால் பதறிப் போன கிராம மக்கள் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலை தேனீக்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருப்பதால் திருவள்ளூர் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
மேலும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தீவிர சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் கஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் வள்ளிமாபேட்டை  சீனிவாசன், ஜோதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0Shares