கோவையில் வியோம் எனும்பிரம்மாண்டஇசைநிகழ்ச்சி

Loading

கோவை
கோவையில் உள்ள, குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘வியோம்’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது..
சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பு, கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, வியோம் எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை  பந்தயசாலையில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில் சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்-ன் இணை செயலர்கள் பிரகாஷ் மற்றும் காயத்திரி பிரகாஷ் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது…
டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் மற்றும் வீணை, வயலின்,கிட்டார். புல்லாங்குழல், கீபோர்ட் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் தாள வாத்தியங்கள் இடம்பெறுகின்றன. மொத்தம் 60 கலைஞர்கள் கொண்ட இந்தக் குழுவில், சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்தனர். தொடர்ந்து
நாற்பது ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், அதன் நிறுவனர் திருத்தந்தை ஸ்வாமி சாந்தானந்த சரஸ்வதி அவர்களால், இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரப்பும் உயரிய நோக்குடன் நிறுவப்பட்டது.
“வியோம்” என்ற சொல்லுக்கு “வெளி ஆகாயம்” என்று பொருள். இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய இசையின் மூலம் பல்வேறு உணர்வுகள், மனநிலைகள் மற்றும் பரிமாணங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தும்.
இது சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் நான்காவது பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சி ஆகும். மொத்தம் 2 மணி நேரம் இந்த கச்சேரி நடைபெறும். இதற்கான டிக்கெட் வடவள்ளியில் உள்ள சிவாஞ்சலி அலுவலகத்தில் கிடைக்கும் என தெரிவித்தனர்.
0Shares