32மாணவர்களுக்கு 64காதொலிகருவி ஆட்சியர் பிரதாப்
![]()
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு 32 மாணவர்களுக்கு 64 காதொலி கருவிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 442 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 209 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 26 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 10 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி78 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 119 மனுக்களும் என மொத்தம் 442 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் காதொலி கருவிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 500 காதொலி கருவிகள் ரூ.16,42,500 மதிப்பீட்டில் பெறப்பட்டு அதனை வழங்கும் அடையாளமாக சிறப்புப் பள்ளிகளை சேர்ந்த 32 மாணவர்களுக்கு 64 காதொலி கருவிகள் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், கூடுதல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

