கோவையில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது

Loading

கோவை
கோவையில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஆண்டு தோறும் வழங்கபடும் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு, 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருதாக வழங்கப்பட்டது.
கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பாக, ஆண்டு தோறும், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஏற்கெனவே இந்த விருது எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கபட்டது பெருமை படுத்த பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான விருது, புதுச்சேரி எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு அறிவிக்க பட்டது. ஆனால் உடல்நலக் குறைவால் சமீபத்தில் இக்கவிஞர் காலமானதை, தொடர்ந்து, அவரது நினைவாக,  விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனின் விருப்பப்படியே அவரது நினைவுடன் சிறுகதை, கவிதை, நாவல், நாட்டாரியல் ஆய்வு, நாட்டுப்புறக் கலை, மொழிபெயர்ப்பு, செவ்வியல் கலை என பல்வேறு தளங்களிலும் இயங்கி வரும் இளம் படைப்பாளிகளான  தேவி லிங்கம், சஜு, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் ராம்ராஜ்,  ஆகிய 5 இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு  தலா ரூ.1 லட்சம் ரொக்கம், கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவை வழங்கப்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் விஷ்ணுபுரம்- ரமேஷ் பிரேதன் நினைவு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக ரமேஷ் பிரேதன் குறித்து எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கியுள்ள ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த விருது விழாவில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா, கன்னட எழுத்தாளர் கவிஞர் ஜெயந்த் காய்கினி, எழுத்தாளர் ஆஸ்டின் செளந்தர், எழுத்தாளர் அகரமுதல்வன் ஆகியோருடன் எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
விழாவின் முதல் நாளில் இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளார்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாசகர்களிடம் உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares