14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை
![]()
கடம்பத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை :
திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு, (60) வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்படவே திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவமனையிலிருந்து கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கடம்பத்தூர் போலீசார் வேலுவை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை வேலு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடம்பத்தூர் போலீசார் வேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

