விருதுக்கு விண்ணப்பிக்கநாளைகடைசி நாள்

Loading

தமிழக அரசின் “கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கநாளைகடைசி நாள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் டிச 14 : சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான  2026 ஆம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு  தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய  நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக)   இவ்விருதினை  பெறத் தகுதியுடையவராவர்.மேலும் இவ்விருதானது ஒரு சாதி,  இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி  இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ  வகுப்புக்  கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது  வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ. 10,000, மற்றும் ரூ.5,000 க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை  இதில் அடங்கும்.

2026- ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட இணையதள முகவரியான  http://awards.tn.gov.in  த்தில் மட்டுமே 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.  உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதலமைச்சரால்  26.01.2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவர் .எனவே திருவள்ளூர்  மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடையவர்கள்  இத்திட்டத்தில் விண்ணப்பித்து  பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares