பிரதம மந்திரி கிராம சாலை 25 வது ஆண்டு விழா

Loading

திருவள்ளூரில் பிரதம மந்திரி கிராம சாலை 25 வது ஆண்டு விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் டிச 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலை 25 வது ஆண்டு விழாவையொட்டி 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்த, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலை 25 வது ஆண்டு விழாவை  அனுசரிக்கும் விதமாக 150க்கும் மேற்பட்ட கே.எம்.என். பிரதார்ஸ் நகராட்சி,  ஆர்.எம்.ஜெ. அரசு மகளிர்,  சி.சி.சி. ஆகிய அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து  மாணவர்களிடம் சாலை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமாக எடுத்துரைத்தார்.
பின்னர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்பூங்காவில் சாலை பாதுகாப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களை காண்பித்து விளக்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜவேல், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன் திராளன அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares