இந்தியகுடிமைப்பணிகளில்சேருவதற்குபோட்டித்தேர்வு
![]()
மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் நவ 20 : அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன் படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னைஅகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து 2025-26 ஆம் ஆண்டுக்கு 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (மண்டலம்) சென்னை அலுவலகம் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திருவள்ளூர் (இருப்பு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், எண்.05, பாலாஜிதெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி தாலுகா, திருவள்ளுர்-601204 என்ற அலுவலக முகவரியில் நேரிலோ 044-2797 2457 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்

