புற்றுநோய் சிகிச்சைக்கான ஹை-பெக் சிறப்பு கிளினிக்

Loading

கோவை
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான ஹை-பெக் சிறப்பு கிளினிக் மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை இயங்கி வருகின்றது. இம்மருத்துவமனைமேற்கு தமிழகத்தில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஹை-பெக் கீமோதெரபி சிறப்பு க்ளீனிக்கை துவங்கியுள்ளது. இம்மையத்தின் சேவை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜிகேஎன்எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி கூறியதாவது..
நமது மருத்துவமனையில் இது வரை 25 ஹை-பெக் கீமோதெரபி சிகிச்சைகளை வழங்கியுள்ளதாகவும், தற்போது இம்மையத்தில் சிக்கலான வயிற்று புற்றுநோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கின்றது என தெரிவித்தார். மேலும் கூறியவர்..

ஹை-பெக் என்பது கருப்பை புற்றுநோய், குடல் கட்டிகள், பெருங்குடல் புற்றுநோய்கள், இரப்பை புற்றுநோய்கள் மற்றும் வீரியம் மிக்க கட்டிகள் போன்ற வயிற்று பகுதியில் ஆழமாக பரவியுள்ள புற்றுநோய்களை கொண்ட நோயாளிகளுக்கு வழங்க படும் மிகவும் சிறப்பு வாய்ந்த சிகிச்சை முறை என கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வயிற்றுக்குள் கீமோதெரபி செய்யப்படுகின்றது இந்த சிகிச்சை முறையில் நுண்ணிய புற்றுநோய் செல்கள் நேரடியாக அளிக்க படுகின்றது. மேலும் மருந்து ஊடுருவல் மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதுடன் வழக்கமான கீமோதெரபியுடன் தொடர்புடைய பக்க விளைவுகளை குறைக்கின்றது என்று தெரிவித்தார். இது வயிற்று புற்றுநோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்குகின்றது என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது புற்றுநோயியல் துறைத்தலைவர் டாக்டர் சிவநேசன், உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

0Shares