சரக்கு ரயில் மோதிய விபத்தில் பெண் பலி

Loading

திருவள்ளூர் நவ 06:
செவ்வாபேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பெண் பலி :
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே டி ஜி நகரில் வசித்து வருபவர் தனசேகர். இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புஷ்பா கடைக்கு செல்வதற்காக செவ்வாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
அப்போது  திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் புஷ்பா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் விபத்தில் பலியான புஷ்பாவின் உடலை மீட்டு மிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவை சேர்ந்த இந்த குடும்பத்தினர் தற்போது தான் இந்த பகுதியில் குடியேறியது தெரிய வந்துள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares