வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026
![]()
திருவள்ளூர் அக் 31 : திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப் தலைமை பேசினார்.அப்போது, அவர் பேசியதாவது தேர்தல் ஆணையம் 1.1.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 படிவங்கள் அச்சிடுதல், பயிற்சி 28.10.2025 முதல் 3.11.2025 வரையிலும் வழங்கப்படுகிறது. வீடுதோறும் எண்ணிக்கை கட்டம் நவ.4 இல் தொடங்கி, டிச.4 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. தொடர்ந்து டிச.9 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், டிச.9 முதல், அடுத்தாண்டு ஜன 8 வரையில் உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகும். பின்னர் விசாரணை அறிவிப்பு சார்பு செய்தல், விசாரணை மற்றும் சரிபார்ப்பு டிச.9 முதல் அடுத்தாண்டு ஜன.31 வரையிலும் மேற்கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7 இல் வெளியிடப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 35.82 லட்சம் வாக்காளர்களுக்கும், கணக்கெடுப்பு படிவம் அந்தந்த வாக்காளர்கள் வசிக்கும் இல்லங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் நவ.4 முதல் டிச.4}ஆம் தேதி வரையில் கொடுத்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படும். அதில் வாக்காளரது பெயர், புகைப்படம், மாநிலம், தொகுதி, பாகம் எண், பாகத்தில் வரிசை எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். அந்த படிவத்தில் அதற்கான இடத்தில் வாக்காளர் அவரது பிறந்ததேதி, கைபேசி எண், பெற்றோர் பேர்கள், ஆதார் எண் குறிப்பிடுவது அவசியம். மேலும், வாக்காளர் 40 வயதுக்கு மேல் இருந்தால், அதாவது அவர் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அப்பட்டியலின் தொகுதி எண், பாகம் எண், வ.எண் (இதை www.elections.tn.gov.n ல் பெறலாம்) ஆகியவற்றுடன் பெயர் மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடலாம். மேலும், வாக்காளர் 40 வயதுக்கு குறைவாகவோ அல்லது 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வாக்காளரின் தந்தை அல்லது தாயார், உறவினர் பெயர் மேற்படி வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவர்களின் பெயர், தொகுதி எண், பாகம் மற்றும் வரிசை எண் ஆகியவைகளை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கலாம்.மேற்படி உறவினர்களின் பெயர் இல்லாவிட்டால், படிவத்தில் தற்போதைய புகைப்படத்துடன் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வரும் டிச.4 ஆம் தேதிக்குள் அளிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்கள் https://voters.eci.
இச்சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திலும், 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் தேர்தல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் உதவி மையம், ஆட்சியர் அலுவலகத்துக்கு -7305158550 என்ற கைப்பேசி எண்ணிலும், அதேபோல் வாக்காளர் பதிவு அலுவலர் தேர்தல் உதவி மையங்கள் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கும்மிடிப்பூண்டி -7200133851, பொன்னேரி -9150799790, திருத்தணி -8610645913, திருவள்ளூர் -9445900494, பூந்தமல்லி -9789254821, ஆவடி -8925902432, மதுரவாயல் -9445190091, அம்பத்தூர் -9445190207, மாதவரம் -9003595898, திருவொற்றியூர் -9445190201 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, வாக்காளர்கள் இச்சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முழுமையாக பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார். இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகுமார், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா(அதிமுக), வழக்கறிஞர் அணி (திமுக) பி.கே.நாகராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்மா, மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

