நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆட்சியர் மு.பிரதாப் தகவல்

Loading

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் அக் 31 : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு  வருகிற 03.11.2025 அன்று காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்   நடைபெறவுள்ளன. மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 8.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் மற்றும் 25 வயதிற்கு மேப்பட்ட ஆண்கள் 10.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் நடைபெறவுள்ளன.

இப்போடியில் முதல் இடத்தை பெறும் வீரர்,வீராங்கனைகளுக்கும் ரூ.5000 வீதமும், இரண்டாம் இடத்தை பெறும் வீரர்,வீராங்கனைகளுக்கும்  ரூ.3000 வீதமும், மூன்றாம்  இடத்தை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கும்  ரூ.2000 வீதமும், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் ரூ.1000 வீதமும் மொத்த பரிசு தொகை ரூ.68000  மும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ / மாணவியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள பொதுமக்கள்  அனைவரும் வருகின்ற 02.11.2025  அன்று மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கதிற்கு வருகை தந்து  தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் முதல் பக்கத்தின் நகல், வயது சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவைகளை சமர்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்திட வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட தடகள பயிற்றுநர் அ.லாவண்யா அவர்களை 8072908634 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares