மின்கம்பியை மிதித்த திமுக நிர்வாகி பலி

Loading

பேரம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த திமுக நிர்வாகி பலி : மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை :
திருவள்ளூர் அக் 31 : திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கே.கே.நகர் 1 வது தெருவை சேர்ந்தவர் விவசாயி  சிலம்பரசன் (38). இவர் திமுகவில் இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்தார். இவருக்கு திருமணமாகி பவானி என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சிலம்பரசன் வழக்கம் போல பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி நாகாத்தம்மன் கோவில் அருகே உள்ள தனது கடையை பார்வையிட சென்றார்.
அப்போது மழையின் காரணமாக அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அவர் எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் இறந்த சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares