மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்ஆட்சியர் மு.பிரதாப்

Loading

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் அக் 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 492 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 48 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 27 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 18 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி36 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 363  மனுக்களும் என மொத்தம் 492 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

முன்னதாக, சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு கொடுத்து உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் இரண்டு கால்கள் பாதிப்படைந்த 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6.30,000 மதிப்பில் மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares