மத்திய குழுவினர் நெல் ஈர பதம் குறித்து நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் நெற்பயிரின் ஈரம் பதம் குறித்து நேரில் ஆய்வு :
திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், செம்பேடு ஊராட்சி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய உணவுத்துறை உதவி இயக்குநர் டி.எம்.ப்ரீத்தி தலைமையில்  தொழில்நுட்ப அலுவலர்கள் பிரியா பட், அனுபமா, மேலாளர் அருண் பிரசாத், வேலூர் இந்திய உணவு கழகம் கே.சி. உமா மகேஸ்வரி, முதுநிலை மேலாளர் தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழகம் தலைமையிடம் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் நெற்பயிரின் ஈரம் பதம் கண்டறியும் கருவியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அப்பொழுது ஆட்சியர் கூறியதாவது :
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்த பின்னர் அவற்றில் உள்ள ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக ஒன்றிய அரசு 17 சதவீதம் ஈரப்பதம் இருப்பதும் இருந்தால் அதிகபட்ச அளவு, அதற்கு மேல் உள்ள நெல் கொள்முதல் செய்ய இயலாது.
பல்வேறு விவசாய சங்கங்கள் வைத்த கோரிக்கை தொடர்ந்து, இருப்பத உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.அதன் படி ஒன்றிய அரசு 3 மத்திய குழுக்களை அமைத்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் மூன்றாவது குழு வட தமிழகம் மாவட்டங்கலான திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு கொண்டனர். செங்கல்பட்டு,திருவள்ளூர்,மதியம் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு மேற்கொள்கின்றனர். ஈரப்பதம் குறத்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய உதவி இயக்குநர்,2  தொழில்நுட்ப அலுவலர்கள், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களும்  ஆய்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெருப்பயிர்களில் எவ்வளவு ஈரப்பதம் உள்ளது,
அதன் சராசரி அளவெடுத்து ஒன்றிய அரசிற்கு அறிக்கையாக வழங்கப்படவுள்ளது. பின்னர் ஒன்றிய அரசின் கொள்கை முடிவு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள துவக்கப்படும். இதனைத் தொடர்ந்து காக்கவாக்கம், பொன்னேரி,  கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மண்டல மேலாளர் குணசேகர். துணை மண்டல மேலாளர் சீனிவாசன், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் துறை சார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares