மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடு

Loading

பழனியில் மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும் , ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே கோதமங்கலம் ,வையாபுரி குளம் , புதுக்குளம் உள்ளிட்ட 39 குளங்களில் சுமார் 2700 மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து மீனவர்கள் எந்த குளத்தை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த குளத்திற்கு அனுமதி வழங்குவதற்கான டோக்கனை மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரிகளால்  வழங்கப்பட வேண்டிய நிலையில் மீனவர் கூட்டுறவு சொசைட்டி அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு மட்டும் கேட்கும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி தருவதாகவும் ,இதனால் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் அதிகவரத்து இல்லாத பகுதியில் மீன் பிடிக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகளை கண்டித்து இன்று மீனவர் கூட்டுறவு சொசைட்டி அதிகாரிகளை கண்டித்து  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.  இந்த ஆர்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் ,பள்ளி குழந்தைகள் என 500 ககும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares