5 நாட்கள் தொடர் விடுமுறை..குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!
![]()
அக்.,3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், நாளை மறுநாள் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்கள் நாளை புதன் மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை வருவதனால் வரும் அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது
அக்டோபர் 4,5ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. இந்தநிலையில் அக்டோபர் 3ம் தேதி ஒருநாளை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் என்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தசரா பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவர்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்.,3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கு இந்த தொடர் விடுமுறையானது குஷியை ஏற்படுத்தியுள்ளது , அரசு அலுவலர்களின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்த்துஅரசு அலுவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

