10- நாட்கள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.. முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்!

Loading

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம் என்று காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது :10- நாட்கள் சட்டமன்றத்தை நடத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.

மேலும் காரைக்கால் மக்கள் குறித்து ஆளும் அரசு கவலைப்படுவதில்லை.சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை ஆட்சியாளர்கள் தெரிவிக்கவில்லை.

கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் முதலமைச்சர் 4-முறை மட்டுமே காரைக்கால் பகுதிக்கு வந்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்காலில் 5-தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை குறைந்த பட்சம் 10-நாட்களாவது நடத்த வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்துவோம் – காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியில் கூறினார்.

0Shares