காதலியை கொன்று விட்டு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Loading

காதலியை கொன்று விட்டு காதலன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்த திவ்யா (26) மற்றும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள். ஆனால் சமீப காலமாக அவர்களுக்கிடையே தகராறுகள் இடம்பெற்று, உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் சுதீர் திவ்யாவை தொடர்பு கொண்டு பரங்கிப்பேட்டை பகுதியில் சந்திக்க அழைத்தார். அங்கு இருவரும் சந்தித்தபோது, வாய்த்தகராறு தீவிரமாக, சுதீர் தன் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திவ்யாவை குத்தினார். கீழே விழுந்ததையடுத்து, திவ்யா உயிரிழந்தார் என நினைத்த சுதீர், தன் வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த திவ்யா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தும்பே கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பண்ட்வால் புறநகர் போலீசார் வந்து சுதீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரிதாபமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0Shares