புகையிலை பொருட்கள் வைத்திருத்தல் கடை உரிமம் ரத்து.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறித்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2006 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல் தொடர்பான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் உணவுப் பொருட்களின் தரங்கள் குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் கள ஆய்வுகள் குறித்தும், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையினர் கூட்டு புல தணிக்கை மேற்கொள்ளும் பொழுது இரண்டு துறையினர் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது ஏதேனும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் இவ்வறிக்கையை உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு கடைகளை மீண்டும் திறக்க விடாமல் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், கலந்து கொண்ட வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்த அங்கி மற்றும் தொப்பிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.கதிரவன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிக்குமார், முதன்மை கல்வி அலுவலர் (பொ) மோகனா, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஜெயக்குமார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares