ஜூலை 18 தமிழ்நாடு தினம்..மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் வகையில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்குதமிழ்நாடு என பேரறிஞர்அண்ணாஅவர்கள்பெயர்சூட்டியசூலை18ஆம்நாளினையே“தமிழ்நாடுநாளாக”இனிகொண்டாடப்படும் என்பதைதெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட18.07.1967-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும்சூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாககொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கிணங்க, தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 04.07.2025 அன்று காலை 09.30 மணி முதல் தேனி மாவட்டஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளன.பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி “

1) ஆட்சிமொழிவரலாற்றில் கீ.இராமலிங்கம் 2) பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரின்தமிழ் ஆட்சிச்சொல் பணி” எனும் தலைப்பிலும், பேச்சுப்போட்டி “ 1) கடமை,கண்ணியம், கட்டுப்பாடு 2)அன்னைத் தமிழே ஆட்சிமொழி 3)தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர் 4) அறிஞர் அண்ணா கண்டதமிழ்நாடு 5) ஆட்சிமொழி விளக்கம் 6) தமிழ்நாடுஎனப் பெயர் சூட்டிய நிகழ்வு 7) ஆட்சிமொழி – சங்க காலம் தொட்டு8) இக்காலத்தில் ஆட்சிமொழி ” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள்நடத்தப்படும்.கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிமாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரியபடிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு
அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் முதற்கட்டமாககீழ்நிலை போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும்மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில்கலந்து கொள்ளலாம். இப்போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்கள்பெறுவதற்கு 04546 – 251030 / 9159668240 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும்மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம்பரிசாக ரூ.7,000/-, மூன்றாம் பரிசாக ரூ.5,000/-, காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0Shares