வடக்குத்து ஊராட்சியில் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி.. MLA இராஜேந்திரன், துவக்கி வைத்தார்!

Loading

நெய்வேலி சட்டமன்ற தொகுதி வடக்குத்து ஊராட்சியில் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி வடக்குத்து ஊராட்சியில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது, இதனை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், ஒவ்வொரு நகர் பகுதிக்கும் சென்று பார்வையிட்டு 50க்கும் மேற்பட்ட சாலைகளை தேர்வு செய்து தமிழ்நாடு முதல்வரிடம் நேரில் சென்று சிறப்பு நிதி அளிக்குமாறு மனு அளித்தார். அதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக சுமார் 3- கோடி மதிப்பீட்டில் 25 சாலைகள் முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சிறப்பு நிதியிலிருந்து ஒதுக்கி அனுமதி அளித்தார். இந்நிலையில் கீழ் வடக்குத்து, மேல் வடக்குத்து, எம்ஜேபி.நகர் மாருதி நகர், சக்தி நகர், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், சாலை பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், பொறியாளர் அனுஷா, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவை தலைவர் வீர.ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, துணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சடையப்பன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ்,தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், தர்மலிங்கம், கோபு,சுரேஷ், வாஜித், பிச்சையா, ஆபிரகாம், மணி, சங்கர், சிவசங்கர், பசுபதி, வாசு,கோபால்,சிவசங்கர், மணிகண்டன்,பூபதி,சிவா, சதாம்,சிவகுமார்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

0Shares