டாஸ்மாக் கடை வேண்டி தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திருப்பூரில் டாஸ்மாக் கடை வேண்டி 30 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் 1909 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் மூளைச்சலவை செய்து வருவதாகவும், பணம் பறிக்கும் நோக்கில் அவர்கள் இவ்வாறு செயல்படும் நிலையில், அப்பகுதி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும் வருகிறார்கள்..
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் தங்கள் கணவர்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேருவதாகவும், 35 ஆண்டுகளாக செயல்படும் இந்த டாஸ்மாக் கடை அந்த பகுதிக்குபாதுகாப்பை வழங்குவதாகவும், தங்கள் பகுதியில் இதுவரை எந்தவிதமான திருட்டு கூட நடைபெறாத அளவுக்கு அந்த கடையில் பணியாற்றும் இளைஞர்கள் பாதுகாத்து வரும் நிலையில் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என கோரி அப்பகுதி பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர்..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் எனவும், புதிய டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என வலியுறுத்தி பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பேரும்
பரபரப்பை ஏற்படுத்தியது