அவசர கால கட்டத்தில் நடந்த அநீதிகளை நினைவூட்டும் புகைப்பட கண்காட்சி.. மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்!
பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில அலுவலகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவசர கால கட்டத்தில் நடந்த அநீதிகளை நினைவூட்டும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைப்பெற்றது, இக்கண்காட்சியை மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர தூபே திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாட்களில் மக்களின் அடிப்படை உரிமை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாதாரண குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்த கருப்பு காலத்தை நினைவு கூறும் விதமாக “கருப்பு தினம் “நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.தஅவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த கருப்பு காலத்தை நினைவு கூறும் விதமாக “கருப்பு தினம் “அனுசரிக்கப்பட்டது,
அதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில அலுவலகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவசர கால கட்டத்தில் நடந்த அநீதிகளை நினைவூட்டும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைப்பெற்றது, இக்கண்காட்சியை மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர தூபே திறந்து வைத்து பார்வையிட்டார்.