ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது: ஜூலை 1 முதல் அமல்!

Loading

நாடு முழுவதும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பொது போக்குவரத்தில் ரயில்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. நாடு முழுக்க உள்ள முக்கிய நகரங்களை இந்த ரயில்கள் இணைக்கிறது, டாய்லெட் வசதி, நீண்ட தூரப் பயணங்களுக்கு பெர்த் என பல்வேறு வசதிகளும் இருப்பதால் மக்கள் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள். டிக்கெட் விலை குறைவாக இருப்பதும் மக்கள் ரயில்களைத் தேர்வு செய்ய மற்றொரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்திய ரயில்வே துறை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணத்தை சிறிதளவு மாற்றி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் உயரப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி , இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், 500 கி.மீ வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ரெயில் டிக்கெட் உயர்வு இல்லை. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது 500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது. ரெயில் கட்டணம் உயர்வு சிறிதளவு மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

0Shares