பெண் கொடூரமாக படுகொலை..கணவன் தலைமறைவு.!
கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் 55 அண்ணாதுரை,இவர் அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்தார். இந்த தாம்பத்தியினருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.
இதில் ஒரு ஆண் பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது பெண் மற்றும் ஆணுக்கு திருமணம் முடித்து உள்ளனர்.இந்நிலையில் குள்ளஞ்சாவடியில் இருந்து தனது சொந்த ஊருக்கு ஆட்டோவில் வயதான பெண்மணி ஒருவரை அழைத்து வந்த அமுதா திடீரென காலை சுமார் 10 மணியளவில் வீட்டின் பின்பக்கம் குப்பை மேட்டில் கூர்மையான ஆயுதத்தால் முகம், கழுத்தில், கையில் குத்தப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு அமுதா கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதன் பின்னர் இவரது கணவரான கொலை செய்ததாக கூறப்படும் அண்ணாதுரை தலைமறைவாகியுள்ள நிலையில் அமுதாவின் உடலை கைப்பற்றி சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த அண்ணா துறையை போலீசார் கைது செய்தனர். கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.