தாக்குதலை நடத்துவதா.. வேண்டாமா..அமெரிக்க சொன்ன பதில்..உலக நாடுகள் அதிர்ச்சி!

Loading

ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்துவதா.. வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது, இந்த மோதல் நேற்று 7-வது நாளாக நீடித்தது.

தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன.

குறிப்பாக ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.இதையடுத்து தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார்.இதையடுத்து  அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா என்பது குறித்த கேள்விக்கு நான் அதைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்துவதா.. வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எந்தவொரு ஒப்பந்தமும் டெஹ்ரானால் யுரேனியம் செறிவூட்டலைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் திறனைக் குறைக்க வேண்டும்.ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார்… அவர் ஒரு அமைதியை நிலைநாட்டுபவர். அவர் வலிமை மூலம் அமைதியை ஏற்படுத்துபவர்” என்று அவர் கூறினார்.

 

0Shares