வாட்டி வதைத்த வெப்பம்..7 இடங்களில் சதமடித்த வெயில்!
புதுச்சேரியில் இன்று அதிகபட்சமாக 99.3 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.அதேபோல அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது . சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது.
தஅக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் இன்று அதிகபட்சமாக 99.3 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
அதன்படி மதுரை விமான நிலையம் – 104.36 டிகிரி, மதுரை நகரம் – 102.92 டிகிரி,கடலூர் – 100.94 டிகிரி
பரங்கிப்பேட்டை – 100.76 டிகிரி ,திருச்சி – 100.58 டிகிரி ,சென்னை மீனம்பாக்கம் – 100.22 டிகிரி,ஈரோடு – 100.04 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.