மின் மயான கட்டுமான பணி..MLA அனிபால் கென்னடி ஆய்வு!

Loading

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மின் மயான கட்டுமான பணிகளை அனிபால் கென்னடி எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார்,

புதுச்சேரி உப்பளம் தொகுதி வம்பாக்கீரப்பாளையம் இடுகாடு மற்றும் சுடுகாடு, அமைந்துள்ள பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களின் தொடர் முயற்சியின் பயனாக ரூபாய் 2.25 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்வர் ரெங்கசாமி அவர்கள் மின்மயானத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார் .

அப்பணி தற்பொழுது நடந்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி துணை செயற்பொறியாளர் யுவராஜ் பணிகள் நடைபெறும் இடங்களையும் தகனமேடை அமைக்கும் இடங்களையும் அதற்கான மின் இயந்திரங்கள் பற்றிய விளக்கங்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் விளக்கி கூறினர்

மேலும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அவருடன் திமுக கிளை செயலாளர் இருதயராஜ் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

0Shares